Friday, December 30, 2011


கலவி முடிந்த களைப்பில் 
நகக்கீறலை  
கோலங்கலாக்க முனையும் 
தூரிகைக்காரி அவள்.......................... 

Thursday, December 29, 2011


அவள்
பட்டாம் பூச்சி பறப்பதை
பார்த்து கொன்டிருப்பாளே
தவிர ஒரு போதும்
அதை பிடித்து தர சொல்லி என்னை
சங்கடபடவைத்ததில்லை....

Saturday, January 29, 2011

நாம் விலகி கொண்டே இருக்கிறோம்
இதயம் வலிக்க வலிக்க
மிச்சம் இருக்கும் வாழ்க்கைக்கு தெரியும்
இளைப்பாறி வந்த இடங்களும்
இடம் மாறி வந்த இடங்களும்
பேசுவதற்கு நிறைய இருந்தும்
இருவரும் மௌனங்களுடன் நின்றோம்
வழிபோக்கர்களை
காமவெறி ஏற்றாத காதல்
நமக்குள்ளே பரிமாறப்பட்டு
கொண்டு இருந்ததது
மௌனங்களை தொந்தரவு செய்யாமல்
மிக நாசுக்காய் சிறிது தள்ளிவைத்து கேட்டாய்
கொஞ்ச தூரம் நடக்கலாமா? என
எங்கெங்கோ அவமானப்பட்டு கடன் வாங்கி
பண்டிகையின் விடியலில்
புது துணி எடுக்க அழைத்து போகும்
கூலிகாரனின் மகன் போல் சந்தோசத்துடன்
உன்னுடன் நடக்க ஆரம்பித்தேன்....
அவள் தூக்கி எறிந்த காதல்
எங்கு இருக்கும்
அனாதையாக...........