Monday, September 27, 2010

நிறைய குடித்து முடித்த பின்பும்
அப்படியே இருக்கிறது
துர்நினைவுகள் அடங்கிய மது கோப்பை......

Thursday, September 23, 2010

வழிகாட்டிகள் உத்தமர்கள்.
வழித்துணையாக வருபவர்களே
துரோகத்தின் மூட்டையை
சுமக்கவிட்டு பிரிகிறார்கள்....

இலையுதிர் காலத்தின்
மொட்டை மரமென இருக்கிறேன்
வேர்கள் ஆழப் பாய்ந்திருக்கிறது.....
பூமியின் மறு முனை வரை

Saturday, July 17, 2010

கவிதைக்காரன்
தனது தேவதையிடம் சொன்னான்
நிலாசோறு தருவேன் என.........
எங்கிருந்தோ வந்த
தே....... (வ) தூதன்
சொன்னான்
நிலா சோறு வேணுமா?
முப்பது நாலும் சோறு வேணுமா?


காதலிகள் புத்திசாலித்தனமான
முடிவுகளே எடுக்கிறார்கள்