Thursday, June 14, 2012

வா அம்மு தயவு செய்து நீ தயவு பார்க்காதே......
இயேசுவை துன்புறுத்தியதை விட கொடுரமாய் என்னை தாக்கு
ஒரு சொட்டு ரத்தம் மிச்சம் இல்லாமல் உறிஞ்சி எடு
மேகத்தில் ஓவியம் வரைய ஆசைபடுவனின்
மேனியை குத்தி குதறு
என்னை மயக்கமடைய விடாதே
உன் உஸ்ன மூச்சை தவிர்த்து
வேறு எதாவது ஆயுதம் கொண்டு எழுப்பு
வலி தான் மருந்து
அந்த முள் கம்பியை எடுத்து முகத்தில் அறை
நரம்புக்குள் நஞ்சு செலுத்தி பற்றி எரிய வை
வழிதான் மருந்து
உனக்கு தெரியும் தானே
மின் கம்பியில் சிக்கி கருகி விழுந்த
காகத்திற்காக கதறி அழுதவன் நான் என்று

Wednesday, June 6, 2012

நான் பரிமாரபடுவதர்க்கென வெந்து கொண்டிருக்கும் கறி...
நீ எரிந்து கொண்டிருக்கும் விறகு....
கொடூர பசியுடன் காத்திருக்கிறது காதல்!!!

Monday, February 13, 2012

நாம் காதலர்கள் என யாரும் சந்தேகப்பட கூடாது 
என காதலர் தினத்தில் 
சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்தோம் 
அதன் பின் தான் உன் மீது இருந்த காதல் 
அம்மாவின் பின்பு ஒளிந்து கொண்டு 
கண்டுபிடி பார்க்கலாம் என விளையாடும்
குழந்தை போல் விளையாட ஆரம்பித்து இருக்கிறது ................
(2012 காதலர் தினம் 12.37 am)