தொலை துரத்தில் இருக்கும் அம்மாவிற்கு
கைபேசியில் திரும்ப திரும்ப
பேச தெரிந்த ஒரே வார்த்தை
சாப்பிட்டாயா சாமி என்பது மட்டுமே
சாப்பாட்டில் அக்காவின் உதிர்ந்த தலைமுடி
நரைத்திருந்தது:
எடுத்து போட்டு சாப்பிட முனைகையில்
கை கழுத்தை இருக்க சுற்றி
விழி பிதுங்க வைத்தது.