Saturday, January 29, 2011

பேசுவதற்கு நிறைய இருந்தும்
இருவரும் மௌனங்களுடன் நின்றோம்
வழிபோக்கர்களை
காமவெறி ஏற்றாத காதல்
நமக்குள்ளே பரிமாறப்பட்டு
கொண்டு இருந்ததது
மௌனங்களை தொந்தரவு செய்யாமல்
மிக நாசுக்காய் சிறிது தள்ளிவைத்து கேட்டாய்
கொஞ்ச தூரம் நடக்கலாமா? என
எங்கெங்கோ அவமானப்பட்டு கடன் வாங்கி
பண்டிகையின் விடியலில்
புது துணி எடுக்க அழைத்து போகும்
கூலிகாரனின் மகன் போல் சந்தோசத்துடன்
உன்னுடன் நடக்க ஆரம்பித்தேன்....

No comments: