பேசுவதற்கு நிறைய இருந்தும்
இருவரும் மௌனங்களுடன் நின்றோம்
வழிபோக்கர்களை
காமவெறி ஏற்றாத காதல்
நமக்குள்ளே பரிமாறப்பட்டு
கொண்டு இருந்ததது
மௌனங்களை தொந்தரவு செய்யாமல்
மிக நாசுக்காய் சிறிது தள்ளிவைத்து கேட்டாய்
கொஞ்ச தூரம் நடக்கலாமா? என
எங்கெங்கோ அவமானப்பட்டு கடன் வாங்கி
பண்டிகையின் விடியலில்
புது துணி எடுக்க அழைத்து போகும்
கூலிகாரனின் மகன் போல் சந்தோசத்துடன்
உன்னுடன் நடக்க ஆரம்பித்தேன்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment